சேமநல நிதி வழங்கல்
ஈரோடு, ஈரோடு மாவட்ட போலீஸ் துறை சார்பில், காவல் அதிகாரிகள், அமைச்சு பணியாளர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியில் இருந்து, மருத்துவ நிவாரணத்தொகை, ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி மாவட்டத்தை சேர்ந்த, 15 பேருக்கு மருத்துவ நிவாரண தொகையாக, 4 லட்சம் ரூபாய், ஈமச்சடங்கு தொகை, 22 பேருக்கு தலா, 20,000 ரூபாய் வீதம், 4.40 லட்சம் ரூபாயை எஸ்.பி., சுஜாதா, காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் வழங்கினார்.