உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு கடந்த ஆக., மாதம் நீர் திறக்கப்பட்டது. துவக்கத்தில், 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முதல், 1,800 கன அடியாக குறைக்கப்பட்டது. அரக்கன்கோட்டை - தடப்பள்ளி பாசனத்துக்கு, 500 கன அடி நீர்; குடிநீர் தேவைக்கு, 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்வரத்து, 3,672 கன அடியாக இருந்தது. நீர்மட்டம், 102.64 அடி; நீர் இருப்பு, 30.8 டி.எம்.சி.,யாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை