உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆண்டுக்கு ரூ.520ல், ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு; அஞ்சல் துறை சார்பில் அழைப்பு

ஆண்டுக்கு ரூ.520ல், ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு; அஞ்சல் துறை சார்பில் அழைப்பு

ஈரோடு: ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபா லன் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், 'இந்தியா போஸ்ட் மேமென்ட்ஸ் பாங்க்', பொது காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து, 18 முதல், 65 வயது வரை உள்ள பொதுமக்கள் பயன் பெறும்படி, விபத்து காப்பீடு பெறும் வசதியை அறிமுகம் செய்-துள்ளனர். ஆண்டுக்கு, 520 ரூபாய் செலுத்தி, 10 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு வசதி பெறலாம்.தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அனைத்து வகை பணியாளர்கள் விபத்து காப்பீடு பெறலாம். தொழில் நிறுவ-னங்கள், தொழிற்சாலைகள் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு மொத்தமாக காப்பீடு பெறலாம். பணிபுரியும் அலுவலகத்தி-லேயே சிறப்பு முகாம் அமைத்து, விபத்து காப்பீடு வசதி பெற ஏற்பாடு செய்யப்படும். விண்ணப்ப படிவம், அடையாளம் அல்-லது முகவரி சான்று நகல் போன்ற காகித பயன்பாடு இன்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், பயோமெட்ரிக் கருவி மூலம் டிஜிட்டல் முறையில் பாலிசி வழங்கப்படும். 10 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு மூலம், விபத்தால் ஏற்படும் மருத்துவ செலவுக்கு, 60 ஆயிரம் ரூபாய், விபத்து மரணம், ஊனம், பக்கவாதம் ஏற்பட்டால் அவர்களது குழந்தைகளின் கல்வி செலவுக்கு, 1 லட்சம் ரூபாய், விபத்தில் மருத்துவம-னையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினமும், 1,000 ரூபாய் வீதம், 10 நாட்களுக்கும், விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினர் பயண செலவுக்கு அதிகபட்சம், 25 ஆயிரம் ரூபாய் வரையும், விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் இறுதி சடங்குக்கு, 5,000 ரூபாய் வரை வழங்கப்படும்.காப்பீடு குறித்து, ஈரோடு அஞ்சல் கோட்டம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் செப்., 26, 27, 28 தேதிகளில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. அருகே உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலம் விபத்து காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !