ரூ.84 ஆயிரம் பறிமுதல்
கோபி:கோபி அருகே வடுகபாளையத்தில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜீவதயாளன் தலைமையில், வடுகபாளையத்தில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுவிப்ட் டிசையர் காரில், சேலம் மாவட்டம் ஆத்துாரை சேர்ந்த சிவக்குமார், 44, வந்தார். இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் வாங்குவதாக கூறி, உரிய ஆவணமின்றி வைத்திருந்த, 84 ஆயி-ரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.