உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் ஊரக வளர்ச்சி துறையினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் ஊரக வளர்ச்சி துறையினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.வட்டார தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தணிக்கையாளர் கோபிநாத் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள கூடுதல் இயக்குனர், இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். தகுதியான பலருக்கும் பதவி உயர்வு வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதை மாற்றி, உடனடியாக பதவி உயர்வு மூலம் அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இளம் பிரதிநிதி சாகுல் ஹமீது நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !