உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மர்ம விலங்கு கடித்து செம்மறி ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து செம்மறி ஆடுகள் பலி

கோபி: கவுந்தப்பாடி அருகே பெரியபுலியூரை சேர்ந்த விவசாயி ரங்கசாமி, 70; அதே பகுதியில் நான்கு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். அங்கு பட்டி அமைத்து ஆடுகளும் வளர்க்கிறார். நேற்று காலை தோட்டத்துக்கு சென்றபோது, ஐந்து செம்மறி ஆடுகள் மர்மமாக இறந்து கிடந்தன. தகவலறிந்து சென்ற அந்தியூர் வனத்துறையினர், பலியான ஆடுகளை பார்வையிட்டு, மர்ம விலங்கின் கால்தடம் உள்ளதா என ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி