உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 2 இடங்களில் பிடிபட்ட சாரை பாம்புகள்

ஈரோட்டில் 2 இடங்களில் பிடிபட்ட சாரை பாம்புகள்

ஈரோடு:ஈரோடு வெட்டுக்காட்டு வலசில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. குடியிருப்பு கழிவு நீர் குழாயில் சாரை பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின்படி, ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை, 9:00 மணிக்கு சென்றனர். பாம்பை வெளியே கொண்டு வரும் முயற்சியாக, குழாய்க்குள் அதிகளவில் தண்ணீரை ஊற்றியதால் வெளியே வரவே லாவகமாக பிடித்தனர்.இதேபோல் ஈரோடு சூளையில் உள்ள ஜி.எஸ்.டி., அலுவலக பார்க்கிங் பகுதியில், பாம்பு நடமாட்டம் இருப்பதாக, 10:00 மணிக்கு தகவல் வரவே அங்கும் விரைந்தனர். ஒரு கல்லின் பின்னால் ஒளிந்திருந்த பாம்பை சில நிமிடங்களில் பிடித்தனர். இதுவும் சாரை பாம்பு என தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !