உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் சூரனை வதம் செய்த சுவாமி

சென்னிமலையில் சூரனை வதம் செய்த சுவாமி

சென்னிமலை: நவராத்திரியை முன்னிட்டு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் ஒன்பது நாட்களாக, சுவாமிக்கு கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. தினமும் ஒரு அலங்காரத்தில் முருகப்-பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நவராத்திரி, 10-வது நாளான நேற்று மாலை விஜயதசமியை ஒட்டி, அம்புசேவை நிகழ்ச்சி நடந்தது. சூசுரனை வதம் செய்வதற்காக கைலாசநாதர் கோவிலில் இருந்து வில், அம்பு, வாள் உள்ளிட்ட ஆயுதங்க-ளுடன் முத்துக்குமாரசாமி குதிரை வாகனத்தில், மாலை 4:00 மணிக்கு புறப்பட்டார். வள்ளி-, தெய்வானை தனி சப்பாரத்தில் வந்தனர். ராஜவீதிகள் வழியாக வலம் வந்த முருகப்பெருமானுக்கு, பிராட்டியம்மன் கோவில் வாசலில் முருகன் கோவில் தலைமை குருக்கள் ராமநாத சிவச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. அதை தொடர்ந்து வண்ணாசூரனை வதம் செய்யும் நிகழ்வு நடந்தது.வாழைமர உருவத்தில் இருந்த வண்ணாசூரனை, வில் மற்றும் அம்பால் குத்தி வதம் செய்தார். பிறகு வண்ணாசூரனை மூன்று முறை வலம் வந்து, தம்பதி சமேதரராக கைலாசநாதர் கோவிலை அடைந்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரி-சனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை