உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திருமண தடை நீக்கும் சுயம்வரா யாகம் கெம்பநாயக்கன்பாளையத்தில் ௯ல் நடக்கிறது

திருமண தடை நீக்கும் சுயம்வரா யாகம் கெம்பநாயக்கன்பாளையத்தில் ௯ல் நடக்கிறது

சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அருகே கெம்பநாயக்கன்பாளையம், கொருமடுவு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வரும், 9ம் தேதி, திருமணத் தடை நீக்கும், 'சுயம்வரா பார்வதி யாகம்' நடக்கிறது. இதில் திருமணம் ஆகாத ஆண், பெண்கள் பங்கேற்கலாம்.இந்த யாக பூஜையில் கலந்து கொண்டால் ஜாதக, பித்ரு, ருது, நவக்கிரக, களஸ்திர, மாங்கல்ய தோஷம், முன்னோர் சாபம் உட்பட அனைத்துவித சாபங்கள், கிரகதோஷம் முற்றிலும் விலகி திருமணம் நடப்பதாக ஐதீகம். திருமண தடைக்கு முக்கிய காரணம், ஜோதிட அமைப்பு மற்றும் பித்ரு தோஷமுமே முக்கிய காரணம். இந்த இரு வகை தோஷங்களையும் நீக்கும் பரிகார தலமாக இக்கோவில் விளங்குகிறது. திருமணஞ்சேரி, கொடுமுடி, காளஹஸ்தி, வைத்தீஸ்வரன் கோவில், பவானி கூடுதுறை, நவக்கிரஹ கோவில்கள், திருப்பதி கோவில்களில் செய்யப்படும் அனைத்து பூஜை வழிபாடு, கிரக தோஷ நிவர்த்தி இங்கு முற்றிலும் இலவசமாகவே செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த பூஜையில் பங்கேற்று திருமணமானவர்கள் தம்பதியாக பங்கேற்கின்றனர். இது தொடர்பான முன்பதிவுக்கு, பழனிச்சாமியை, 97905--91091 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அனுமதி இலவசம். பங்கேற்க கட்டணம் கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை