உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திருக்குறள் வினாடி-வினா போட்டியில் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

திருக்குறள் வினாடி-வினா போட்டியில் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

ஈரோடு, டிச. 22-கன்னியாகுமரியில் கடலில் அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு, அரசு ஊழியர் மற்றும் அனைத்து வகை பள்ளி, கல்லுாரி ஆசிரியர், பேராசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி--வினா போட்டி நேற்று நடந்தது.இதன்படி ஈரோடு மாவட்டத்துக்கான போட்டி, ஈரோட்டில் காந்திஜி சாலை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அரசு, தனியார் பள்ளி ஆசிரியர், கல்லுாரி பேராசிரியர்கள், அனைத்து அரசு ஊழியர்கள் என, 500 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 317 பேர் மட்டுமே பங்கேற்றனர். 50 மதிப்பெண்களுக்கு விடை அளிக்க வேண்டும். ஸ்கிரைபர் உதவியுடன் இருவர் தேர்வு எழுதினர். முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் தேர்வை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஈரோடு மாவட்டத்தில் வெற்றி பெறும் ஒன்பது பேர், விருதுநகரில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ