சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் பாலாலயம்
சென்னிமலை, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை கோவிலான கைலாசநாதர் கோவில், சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் அமைந்துள்ளது. கோவில் கும்பாபிஷேக திருப்பணி நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு நேற்று பாலாலயம் நடந்தது. பல்வேறு யாக பூஜை, கலச ஆவாகணத்தை தொடர்ந்து, மூலவர் கைலாசநாதர், தாயார் பெரியநாயகி அம்மன், சுப்பிரமணிசுவாமி வள்ளி, தெய்வானை உட்பட பரிவார தெய்வங்களுக்கும் பாலாலயம் நடந்தது.