போக்குவரத்து ஊழியர் கோபியில் வாயில் கூட்டம்
போக்குவரத்து ஊழியர் கோபியில் வாயில் கூட்டம்கோபி, டிச. 10-அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், கோபி அரசு போக்குவரத்து பணிமனை முன், வாயில் கூட்டம் நேற்று நடந்தது. கோபி கிளை தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு எட்டு ஆண்டுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேச வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.