உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ் டிரைவரை தாக்கிய இருவருக்கு வலைவீச்சு

பஸ் டிரைவரை தாக்கிய இருவருக்கு வலைவீச்சு

பவானி; கோபி அருகே கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 46; 16-பி அரசு டவுன் பஸ் டிரைவர். அத்தாணி-சத்தி சாலையோரம் நேற்று முன்தினம் மாலை பஸ்ஸை நிறுத்திவிட்டு டிரைவர் செந்தில்குமார், கண்டக்டர் சந்திரன், பஸ்ஸில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது பஸ் அருகே சிலர் சண்டை போட்டுள்-ளனர். திடீரென உள்ளே ஒருவர் வர, அவரை தொடர்ந்து வந்த இருவர், அந்த நபரை தாக்கினர். டிரைவரும், கண்டக்டரும் எச்சரித்து கீழே இறங்-குமாறு கூறியுள்ளனர். இறங்க மறுத்து இருவரும் டிரைவர் செந்தில்குமாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்த புகா-ரின்படி ஆப்பக்கூடல் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் டிரைவரை தாக்கி மிரட்டியது அத்தாணியை சேர்ந்த ரவி, 42, திவாஸ், 35, என்-பது தெரியவந்தது. தலைமறைவான இருவ-ரையும், தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை