உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீட்டில் கர்நாடகா மது விற்ற இருவருக்கு காப்பு

வீட்டில் கர்நாடகா மது விற்ற இருவருக்கு காப்பு

சத்தியமங்கலம், கடம்பூர் போலீசார் கோட்டமாளம் அருகே சுஜில்கரை பகுதியில் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் கர்நாடக மாநில மதுவை, வீட்டில் வைத்து விற்பதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நடத்திய சோதனையில், சீனிவாசன், 50, வீட்டில், 49 பாக்கெட் மது, லட்சுமி வீட்டில், 10 பாக்கெட் மதுவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ