உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபைல் போனை பறித்த இருவருக்கு சிறை

மொபைல் போனை பறித்த இருவருக்கு சிறை

ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி வலசு திரு.வி.க.வீதியில், ஹோட்டல் உள்ளது. இதன் உரிமையாளர் சங்கர், 39; சூரம்பட்டி வலசு வணிக வளாகம் அருகே நின்றபடி, மொபைல்போனில் நேற்று முன் தினம் பேசி கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த இருவர் பேச்சு கொடுத்து, அவரது மொபைல் போனை பறித்து தப்பினர். சங்கர் புகார்படி சூரம்-பட்டி போலீசார் தேடி வந்தனர்.இதில் அந்தியூர் புன்னம் முத்துகுமார் மகன் சுதன், 24; ஈரோடு மாணிக்கம் பாளையம் சண்-முகசுந்தரம் மகன் மோனீஸ்வரன், 24, ஆகியோர் மொபைல்போனை பறித்தது தெரியவந்தது. இரு-வரையும் போலீசார் கைது செய்து, மொபைல்-போனை பறிமுதல் செய்தனர். நீதிமன்ற உத்தர-வுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ