பயன்பாட்டுக்கு வந்த நீர்த்தேக்க தொட்டி
தாராபுரம் தாராபுரத்தை அடுத்த குண்டடம், இடையபட்டியில், மக்கள் பயன்பாட்டுக்காக எட்டு லட்சம் ரூபாய் மதிப்பில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, குடிநீர் வினியோகத்தை துவக்கி வைத்தார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.