உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீர் திறப்பு குறைப்பு

நீர் திறப்பு குறைப்பு

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு கடந்த ஆக., மாதம் நீர் திறக்கப்பட்டது. தொடக்கத்தில், 2,300 கன அடி திறக்கப்பட்ட நிலையில், 1,000 கன அடியாக நேற்று முதல் குறைக்கப்பட்டது. அதேபோல் அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு திறக்கப்பட்ட, 500 கன அடி நீர் 100 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு, 100 கன அடி தண்ணீர் என, 1,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து, 3,187 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம், 102.35 அடி; நீர் இருப்பு, 30.6 டி.எம்.சி.,யாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி