பாசனத்துக்கு நீர் குறைப்பு
புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அணையில் இருந்து, அரக்கன்கோட்டை-தடப்பள்ளி மற்றும் காலிங்கராயன் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு திறக்கப்பட்ட, ௫௦௦ கனஅடி தண்ணீர், 300 கன அடியாக நேற்று முதல் குறைக்கப்பட்டது. அதேசமயம் காலிங்கராயன் பாசனத்துக்கு, 300 கன அடி நீர், குடிநீர் தேவைக்கு, 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணை நீர்வரத்து, 6,107 கன அடி; நீர்மட்டம், 88.85 அடி; நீர் இருப்பு, 20.8 டி.எம்.சி.,யாக இருந்தது.