காளிங்கராயனில் வரும் 16ல் நீர் திறக்க உத்தரவு
ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலில், 15,743 ஏக்கர் பாசன நிலங்களுக்கு நடப்பாண்டு முதல் போக பாசனத்துக்கு வரும், 16ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. அன்று முதல், 120 நாட்கள் என அக்.,13ம் தேதி வரை, 5,184 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தேவை அடிப்படையில் நீர் திறந்து விடப்படவுள்ளது. இதற்கான உத்தரவை நீர் வளத்துறை செயலர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ளார்.