உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வலி நிவாரணி மாத்திரை விற்ற வாலிபர் கைது

வலி நிவாரணி மாத்திரை விற்ற வாலிபர் கைது

ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் காவேரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர், காவேரிக்கரை ராகவேந்திரா கோவில் வீதியை சேர்ந்த வடிவேல் மகன் ஜீவானந்தம், 22, என்பதும், வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்பனை செய்ய வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ஆறு போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !