சாலை தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
ஈரோடு, ஈரோடு கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ராஜன் மகன் குமார், 30, திருமணம் ஆகாதவர். நான்கு சக்கர வாகன ஆட்டோமொபைல் கடை டிரைவர். நேற்று முன்தினம் அதாவது தீபாவளியன்று இரவு, 8:40 மணிக்கு பல்சர் பைக்கில் சென்றார்.அப்போது சாலை தடுப்பில் மோதி விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.