உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை கொள்ளை

கள்ளக்குறிச்சி; நிறைமதியில் பூட்டிய வீட்டை திறந்து 4 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் மணி, 35; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றவர், மீண்டும் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 4 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை