உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சொத்து தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் உட்பட 3 பேர் மீது வழக்கு

சொத்து தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் உட்பட 3 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன்கள் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த சோமநாதபுரம் சேர்ந்த பெரியசாமி மகன் அரசன்,49; இவருக்கும் அவரது அண்ணன்கள் ராஜேந்திரன்,52; முருகேசன்,50; தம்பி பாண்டியன்,36; ஆகியோர் இடையே நிலம் பாகபிரிவினை சம்மந்தமாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஜூலை 31 ம் தேதி அரசன், தனது சொத்தினை சமமாக பிரித்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரன், முருகேசன், பாண்டியன் ஆகியோர் சேர்ந்து அரசனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகினறனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி