எஸ்.பி., அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீதான நடவடிக்கையில், திருப்தி பெறாத மனுதாரர்களுக்கான குறைதீர் கூட்டம், எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமை தாங்கி, 37 மனுதாரரர்களின் குறைகளை கேட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி., சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.