உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பல்லி விழுந்த காலை உணவு 10 மாணவர்கள் அட்மிட்

பல்லி விழுந்த காலை உணவு 10 மாணவர்கள் அட்மிட்

ரிஷிவந்தியம்:கள்ளக்குறிச்சி மாவட்டம், அவிரியூர் அரசு நடுநிலைப்பள்ளியில், 153 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டத்தில் தினமும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.நேற்று காலை 8:00 மணிக்கு 96 மாணவர்களுக்கு வெண்பொங்கல் பரிமாறியபோது, அதில் பல்லி இறந்து கிடந்தது. அதை சாப்பிட்ட 10 மாணவர்கள் மற்றும் 3 சமையலர்களுக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை