உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோவில் உண்டியலில் திருடிய 2 பேர் கைது

கோவில் உண்டியலில் திருடிய 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி : தண்டலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து காணிக்கை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தில் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல் நேற்று காலை 6:00 மணியளவில் பெரிய ஏரியில் கிடப்பதைப் பார்த்தவர்கள் கள்ளக்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றும், கோவில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டனர்.அதில், கோவிலின் கிழக்கு திசையில் உள்ள கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 2 பேர் உண்டியலை துாக்கி சென்றது தெரிந்தது. மேலும், கோவில் வளாகத்தில் ஒரு மொபைல் போன் கண்டெடுத்தனர்.தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தியதில், உண்டியலை உடைத்து திருடியது நல்லாத்துாரைச் சேர்ந்த சுப்ரமணி, 36; சடையன் மகன் சசிகுமார், 29; என தெரிந்தது. உடன் இருவரையும் கைது செய்து 10 ஆயிரம் ரூபயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை