மாற்று கட்சியினர் 200 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர்
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 200 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டம் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி செயலாளர் தேவராஜ், தே.மு.தி.க., கிளைச் செயலாளர் ராஜா உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கட்சினர் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., வசந்த கார்த்திகேயன் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார், துணைச் சேர்மன் அஞ்சலை கோவிந்தராஜ் உடனிருந்தனர்.