உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் 48 பேருக்கு தேசிய அடையாள அட்டை 

 மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் 48 பேருக்கு தேசிய அடையாள அட்டை 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கொங்கராயபாளையம் தனியார் பள்ளியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கி னார். அரசு எலும்பு முறிவு டாக்டர் ஜீவா, மனநல டாக்டர் இர்பாத்பேகம், கண் டாக்டர் கிருத்திகா, நரம்பியல் டாக்டர் ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் முகாமில் கலந்துகொண்ட 53 மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். அதில் தகுதிவாய்ந்த, 48 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டன. 2 மாற்றுத்திறனாளிகள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். 10 பேர்களுக்கு உதவி உபகரணங்கள் வேண்டி ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை