உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது, குட்கா விற்பனை 6 பேர் கைது

மது, குட்கா விற்பனை 6 பேர் கைது

திருக்கோவிலுார் : திருக்கோவிலூரில் மதுபாட்டில், குட்கா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது, பாடியந்தல் கிராமத்தில், அதே பகுதியை சேர்ந்த செல்லக்கண்ணு, 63; சின்னத்தம்பி மகன் குழந்தைவேல், 38; ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 46 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.திருக்கோவிலூரில், வடக்கு வீதியைச் சேர்ந்த சவுந்தரி, 62; அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் மனைவி வள்ளி, 42; முனுசாமி மகன் ஏழுமலை, 43; ஆகியோரிடம் இருந்து, 5 கிலோ மதிப்புள்ள, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் செவலை ரோட்டை சேர்ந்த சண்முகம், 64; என்பவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட, 29 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யபட்டன. இந்த 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம்

கீழ்க்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று காலை டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஹோட்டல் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் 3 பேரும் பைகளில் 220 குட்கா பாக்கெட்டுகள் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.விசாரணையில், வேப் பூர் அடுத்த எஸ்.நரையூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், 41; நயினார்பாளை யம் ஆறுமுகம், 67; முத்துசாமி, 62; என தெரியவந்தது.உடன் 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி