உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 64 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

64 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 64 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டார வாரியாக மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட, அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி சங்கராபுரம் வட்டார பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.அரசு எலும்பு முறிவு மருத்துவர் பரணிதரன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கணேஷ்ராஜா, மனநல மருத்துவர் பாக்கியராஜ், கண் மருத்துவர் காயத்ரி உள்ளிட்டோர் மாற்றுத் திறனாளிகளை பரிசோதித்தனர். இதில் பங்கேற்ற 133 பேரில் 64 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் யு.டி.ஐ.டி., பதிவெண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.இளநிலை உதவியாளர் கவுதம்ராஜ், தரவு உள்ளீட்டாளர் விஜயலட்சுமி ஆகியோர் முகாமிற்கான பணிகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை