உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலையை கடக்க முயன்ற தொழிலாளி கார் மோதி சாவு

சாலையை கடக்க முயன்ற தொழிலாளி கார் மோதி சாவு

உளுந்தூர்பேட்டை: திருநாவலுார் அருகே மொபைல் போனில் பேசியபடி, சாலையை கடக்க முயன்ற கூலித் தொழிலாளி கார் மோதி இறந்தார். உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் மகன் ரஞ்சித்குமார், 34; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் பரிக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மொபைல் போனில் பேசியபடி சாலையை கடக்க முயன்றார். அப்போது திருநாவலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஷிப்ட் டிசையர் கார் மோதி ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி