அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
திருக்கோவிலுார்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஜெ., பேரவை சார்பில் வேங்கூரில் அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்த திண்ணைப் பிரசார துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் மற்றும் பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து மக்களிடம் விளக்கும் வகையில், ரிஷிவந்தியம் தொகுதி, வேங்கூரில் அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரச்சார, துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி உரையாற்றினார். ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் பழனி, சேகர், சந்தோஷ், பழனிச்சாமி, ஜெ., பேரவை இணை செயலாளர் பிரபு, திருக்கோவிலுார் நகர செயலாளர் சுப்பு, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி, தொழிலதிபர் பிரபு, பேரவை மாவட்ட நிர்வாகிகள் சுபாஷ், சிவா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஜெ., பேரவை மத்திய ஒன்றிய செயலாளர் முருகன் நன்றி கூறினார்.