உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்த கஞ்சமலை மகன் பொன்னுசாமி, 55; என்பவர் தனது வீட்டிற்கு பின்புறம் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்த 7 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.200 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !