உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பழைய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜிவ்காந்தி மகன் விஜய், 24; தனது வீட்டிற்கு அருகே மதுபாட்டில் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து விஜயை போலீசார் கைது செய்தனர். ஒரு குவாட்டர் மதுபாட்டில் மற்றும் ரூ.1,800 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !