உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு  

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு  

கள்ளக்குறிச்சி : நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும், மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் வெளிமுகமை முறையில் ஒரு சமுதாய அமைப்பாளர் பணிக்கு(பெண்கள் மட்டும்) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு மற்றும் அடிப்படை கணினி திறன்கள் முடித்திருக்க வேண்டும். ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பகுதி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினராக இருத்தல் வேண்டும். நல்ல தகவல் தொடர்பு திறன் கொண்ட நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.மேலும், நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் போன்ற திட்டங்களில் இருந்து நிறுத்தப்பட்டிருக்கவோ, அகற்றப்பட்டிருக்க கூடாது. வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டடம், மாவட்ட முகமை செயலாளருக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை