மேலும் செய்திகள்
டாஸ்மாக் விற்பனையாளர்களை தாக்கியவர் கைது
19-May-2025
திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தலைமை காவலர் காயம் அடைந்தார். அரகண்டநல்லுார் அடுத்த அருளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் செல்வம், 35; அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6:40 மணிக்கு, வீட்டிலிருந்து புறப்பட்டு பணிக்கு சென்று கொண்டிருந்தார். ஆற்காடு கூட்டுறவு வங்கி அருகே, சென்ற போது எதிரில் வந்த பைக் மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி பாரதி, 32; கொடுத்த புகாரின் பேரில் பைக்கை ஓட்டி வந்த பரனுார், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலிவரதன் மகன் முத்துராஜ், 46; மீது அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19-May-2025