உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும், 4 லட்சத்து 71 ஆயிரத்து 402 மாணவ, மாணவியருக்கு விலையில்லா நோட்டு, புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,176 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. பள்ளி திறக்கும் தினத்தன்று மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், சீருடை, நோட்டு வழங்க முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, அனைத்து பொருட்களும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 4 லட்சத்து 71 ஆயிரத்து 402 மாணவ, மாணவியர் விலையில்லா நோட்டு புத்தகங்களை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ