உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக்கில் மதுபாட்டில் விற்றவர் கைது 

பைக்கில் மதுபாட்டில் விற்றவர் கைது 

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பைக்கில் மதுபாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் பைக்கில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று காலை 8:30 மணியளவில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அப்பகுதியில் பைக்கில் மதுபாட்டில் வைத்து விற்ற கரியப்பா நகரைச் சேர்ந்த மாயகிருஷ்ணன், 38; என்பவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை