உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு 

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மற்றும் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த தோப்பூரை சேர்ந்தவர் வையாபரி மகன் விஜயகாந்த்,31; இவர் சோமண்டார்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்த மோகூர் பகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுமியை கடந்தாண்டு செப்டம்பரில், திருமணம் செய்தார். இரு வீட்டாரும் இணைந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். தற்போது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து, சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலக மகளிர் ஊர் நல அலுவலர் கண்ணமா கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விஜயகாந்த், அவரது தந்தை வையாபுரி, தாய் சுமதி மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி