உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது வழக்கு

சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த வேளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் வெங்க டேசன், 27; இவர், கடந்த 2023ம் ஆண்டு சிறு மியை திருமணம் செய் தார். தற்போது 17 வயதுடைய சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்து தகவலறிந்த தியாகதுருகம் மகளிர் ஊர் நல அலுவலர் முனியம்மாள், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமியை திருமணம் செய்த வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை