உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மக்களுடன் முதல்வர் முகாம் இன்று நடக்கிறது

மக்களுடன் முதல்வர் முகாம் இன்று நடக்கிறது

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் சட்டசபை தொகுதியில், 'மக்களுடன் முதல்வர்' முகாம் இன்று நடப்பதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.அவர் விடுத்த செய்திக்குறிப்பு :கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் இன்று, முதல்வர் மூன்றாம் கட்ட மக்களுடன் முகாம் அமைச்சர் கணேசன் தலைமையில் நடக்கிறது. கல்வராயன்மலை வட்டத்தில் வஞ்சிக்குழி ஊராட்சி-பெரும்பூர்; சேராப்பட்டு ஊராட்சி-தேக்கம்பட்டு; கிளாக்காடு ஊராட்சி-கூடாரம்; வெங்கோடு ஊராட்சி-சின்னபலாப்பூண்டி; ஆகிய கிராமங்கள் என 4 முகாம்களில் முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ