உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நல்லாசிரியர் விருது பெற்ற 9 பேருக்கு கலெக்டர்  வாழ்த்து

நல்லாசிரியர் விருது பெற்ற 9 பேருக்கு கலெக்டர்  வாழ்த்து

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற 9 பேருக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு 2025-26ம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 9 பேர் நல்லாசிரியர் விருது பெற்றனர். தொடர்ந்து நல்லாசிரியர் விருது பெற்ற 9 பேரும் கலெக்டர் பிரசாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சி.இ.ஓ., கார்த்திகா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ