உள்ளூர் செய்திகள்

கல்லுாரி மாணவி மாயம்

கள்ளக்குறிச்சி :வேளாக்குறிச்சியில் மாயமான கல்லுாரி மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த வேளாக்குறிச்சியை சேர்ந்தவர் கோதண்டராமன் மகள் சந்தியா, 20; இவர், அரசு கல்லுாரியில் பி.எஸ்.சி., வேதியியல் 3ம் ஆண்டு படிக்கிறார். கடந்த 28ம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டில் துாங்கிய சந்தியாவை மறுநாள் காலை காணவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் சந்தியா கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை