உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின்னல் தாக்கி பசு, கன்று பலி

மின்னல் தாக்கி பசு, கன்று பலி

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மின்னல் தாக்கி பசு மாடு, கன்று பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருக்கோவிலுார் அடுத்த மேலத்தாழனூர், புதுத்தெருவை சேர்ந்தவர் ராதா, 45; இவரது கணவர் ஏழுமலை இறந்துவிட்ட நிலையில், வீட்டில் மாடு வளர்த்து பால் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, 8:00 மணியளவில் மின்னல் தாக்கியதில் அவரது வீட்டு தோட்டத்தில் இருந்த பசுமாடு மற்றும் அதன் கன்று குட்டியும் சுருண்டு விழுந்து இறந்தது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி