உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

 கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி சங்கர், 50; இவர் நேற்று தனக்கு சொந்தமான பசுமாட்டை மேய்ச்சல் நிலத்தில் மேய விட்டு இருந்தார். அப்போது அருகில் இருந்த தரைக்கிணற்றில் பசுமாடு தவறி விழுந்தது. தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ