மேலும் செய்திகள்
மாநில இறகு பந்து போட்டி காஞ்சி மாணவர்கள் தேர்வு
23-Aug-2025
கள்ளக்குறிச்சி: மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை இறகு பந்து போட்டியில் கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்தினாளிகள் என 5 பிரிவுகளின் முதல்வர் கோப்பை போட்டிகள் மாவட்ட அளவில் நடந்து வருகிறது. இதில் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பேட்மிட்டன் உள்அரங்கில் நேற்று நடந்தது. போட்டியில் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சி.இ.ஓ., கார்த்திகா - சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி ஆசிரியர் தீபா ஆகியோர் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்தனர். தொடர்ந்து இவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். அதேபோல் ஒற்றையர் பிரிவில் ஆசிரியர் தீபா முதலிடமும், சி.இ.ஓ., கார்த்திகா இரண்டாமிடம் பெற்றனர். அரசு ஊழியர்களுக்கான போட்டியில் மாநில அளவலான போட்டிக்கு தகுதி பெற்ற சி.இ.ஓ., கார்த்திகாவிற்கு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
23-Aug-2025