உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலையில் நடந்து சென்ற முதியவர் லாரி மோதி பலி

சாலையில் நடந்து சென்ற முதியவர் லாரி மோதி பலி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்தார். உளுந்துார்பேட்டை தாலுகா ஏ.சாத்தனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம், 65 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று காலை 8:45 மணியளவில் நடந்து சென்றார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி நடந்து சென்ற அந்த முதியவர் மீது மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரை பற்றிய விவரங்கள் தெரியவில்லை. தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை