உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி வரும் 29ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆக., மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ம் தேதி காலை 11:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை நடக்கிறது. கூட்டத்தில் மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கைகள் தொடர்பாகவும், தனிநபர்கள் குறைகள் குறித்த மனுக்களையும் அளித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை