உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை

மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை

சின்னசேலம் : பெரியசிறுவத்துார் கிராமத்தில் மகன் இறந்த சோகத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துார் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன், 55; கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இவரது மகன் ராஜதுரை இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த கோவிந்தன் கடந்த 7ம் தேதி காலை வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கினார். அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தன் நேற்று காலை இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி