உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குண்டர் சட்டத்தில் தலைமையாசிரியர் கைது

குண்டர் சட்டத்தில் தலைமையாசிரியர் கைது

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அடுத்த ஆர்.ஆர்.குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை அரசன், 52. இவர் ஒலையனுார் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்தார். பள்ளிக் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பான புகாரில், உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், 'போச்சோ' சட்டத்தில் அவரை கைது செய்தனர்.அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ரஜத் சதுர்வேதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் பிரசாந்த் உத்தரவில், துரை அரசன் குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ